என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பொள்ளாச்சி சம்பவம்
நீங்கள் தேடியது "பொள்ளாச்சி சம்பவம்"
பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் போராட்டம் ஈடுபட்டனர். #PollachiAbuseCase
புதுக்கோட்டை:
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமை மற்றும் சித்ரவதை சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர்.
ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். மேலும் மாணவர் அமைப்பை சேர்ந்த ஒரு சிலர் இந்த போராட்டத்தை தூண்டி விட்டதாக கூறி போலீசார் அந்த மாணவர் அமைப்பு பிரதிநிதிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது. மேலும் கல்லூரிக்குள் இருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் கோஷங்கள் எழுப்பியவாறு வெளியில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
ஆனால் அவர்களை வெளியே விட கல்லூரி ஆசிரியர்கள் மறுத்ததோடு கல்லூரி கதவையும் பூட்டினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவிகள் கலைந்து செல்லாமல் கல்லூரிக்குள்ளேயே நின்றபடி கோஷங்களை எழுப்பியவாறு பூட்டப்பட்ட அந்த கல்லூரி கதவை திறந்தனர். பின்னர் மாணவிகள் வெளியே வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தை தூண்டியதாக மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் போலீஸ் வாகனத்தை சிறை பிடித்ததோடு நான்கு புறமும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் அரைமணி நேரம் நீடித்தது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கைது செய்யப்பட்ட 3 மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் தங்களுக்கு கிடைத்த வெற்றி என மாணவிகள் கோஷமிட்டபடி போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்குள் சென்றனர். ஆனாலும் மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #PollachiAbuseCase
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமை மற்றும் சித்ரவதை சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர்.
ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். மேலும் மாணவர் அமைப்பை சேர்ந்த ஒரு சிலர் இந்த போராட்டத்தை தூண்டி விட்டதாக கூறி போலீசார் அந்த மாணவர் அமைப்பு பிரதிநிதிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது. மேலும் கல்லூரிக்குள் இருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் கோஷங்கள் எழுப்பியவாறு வெளியில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
ஆனால் அவர்களை வெளியே விட கல்லூரி ஆசிரியர்கள் மறுத்ததோடு கல்லூரி கதவையும் பூட்டினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவிகள் கலைந்து செல்லாமல் கல்லூரிக்குள்ளேயே நின்றபடி கோஷங்களை எழுப்பியவாறு பூட்டப்பட்ட அந்த கல்லூரி கதவை திறந்தனர். பின்னர் மாணவிகள் வெளியே வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தை தூண்டியதாக மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் போலீஸ் வாகனத்தை சிறை பிடித்ததோடு நான்கு புறமும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் அரைமணி நேரம் நீடித்தது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கைது செய்யப்பட்ட 3 மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் தங்களுக்கு கிடைத்த வெற்றி என மாணவிகள் கோஷமிட்டபடி போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்குள் சென்றனர். ஆனாலும் மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #PollachiAbuseCase
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து ஊரிசு கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று போராட்டம் செய்தனர். #PollachiAbuseCase #PollachiCase
வேலூர்:
பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ படங்கள் எடுக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. வேலூர் ஊரிசு கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். #PollachiAbuseCase #PollachiCase
பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ படங்கள் எடுக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. வேலூர் ஊரிசு கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். #PollachiAbuseCase #PollachiCase
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X